வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம், புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தி உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் முன்மொழிவொன்றை சபையில் சமர்ப்பித்தார். முன் மொழிவை சமர்ப்பித்து சபையில் கருத்து தெரிவிக்கையில்,
எமது பிரதேச மக்கள் நிதிக்கான அவசர தேவை கருதி அதிகூடிய வட்டிகளுக்கு நிதியை பெற்றுக்கொள்கின்றனர்.அதன் பின்னர் குறித்த கடனை செலுத்துவதில் பெரும் இடர்களை சந்திக்கின்றனர்.
குறிப்பாக பெண் தலைமை குடும்பம் இக்கடனை பெற்றிருந்தால் குறித்த பெண்களுடன் தவறான முறையில் நடந்துகொள்ள சில வசூலிப்பாளர்கள் முயற்சிப்பது மட்டுமல்லாது அதற்கான மன அழுத்தங்களையும் கொடுக்கின்றனர். இதனால் தற்கொலை முயற்சிக்கு கடனாளர்கள் செல்லும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்படுகின்றது.
எனவே எமது பிரதேச மக்களது வறுமையை குறித்த நிறுவனங்கள் தமக்கான முதலீட்டு இடங்களாக பயன்படுத்துவதற்கு எமது சபை அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து உறுப்பினர் நாவலன் கருத்து கூறுகையில்,
அதனை அடுத்து உறுப்பினர் பார்த்தீபன் கருத்து தெரிவிக்கையில்,
அதனை அடுத்து சபையின் தவிசாளர் அசோக்குமார் தலைமையில் , சபையின் அனுமதி பெறாது எந்த ஒரு நுண் நிதி நிறுவனமும் உள்நுழைய முடியாது. மாறாக நியாயமான வட்டி வீதங்களுடன் பிரதேச சபையின் நியமங்களை ஏற்று சபையின் அனுமதி பெற்றே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறு சபையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என குறித்த முன்மொழிவு ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

