Home இலங்கைவேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் விபத்து – சாரதிக்கு காயம்

வேக கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் விபத்து – சாரதிக்கு காயம்

by admin
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம் , வேக கட்டுப்பாட்டை இழந்து, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் சங்கத்தானை பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி , கடை யொன்றுடன் மோதி தனது இயக்கத்தை நிறுத்தியது.
குறித்த விபத்தில் டிப்பர் சாரதி காயமடைந்த நிலையில் , அங்கிருந்தவர்கள் சாரதியை மீட்டு , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.   சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More