Home இலக்கியம்கடலுக்கும் கரைக்கும் அழகுமுண்டு – சி. ஜெயசங்கர்.

கடலுக்கும் கரைக்கும் அழகுமுண்டு – சி. ஜெயசங்கர்.

by admin

கடலுக்கும் கரைக்கும் அழகுமுண்டு ……

 

கடலும் கரையும் அருகருகே – அவை

இணையும் பரப்போ அழகிருப்பே

இயல்பில் அவை ஒத்து இருப்பதில்லை – ஆனால்

இணைவில் அழகிற்கு குறைவு இல்லை.

 

கடலென்றும் ஓய்ந்தே இருந்ததில்லை

தரையோ அசைந்து திரிந்ததில்லை

 

பொங்கிப் பெருகிச் சிரித்து வரும் –  பெரும்

கடலலை கரையில் தணிந்து கொள்ளும் – அவை

தரைமடி  மீதில் அமைதி  கொள்ளும் – ஆயினும்

கடலென்றும் ஓய்ததே இருந்ததில்லை

தரையோ அசைந்து திரிந்ததில்லை –  அவை

இயல்பில் ஒத்து இருப்பதில்லை –  ஆனால்

இணைவில் அழகுகிற்கு குறைவு இல்லை.

 

அலைகள் அணைந்து அமைதி கொள்ளும்

அலைதொடு கரைதனின் மந்திரத்தில் – மனிதர்

மனங்கள் ஆறி அமைதி கொள்ளும்

கடலுக்கும் கரைக்கும் அழகுமுண்டு

மனித மனங்களை ஆற்றும் குணமுமுண்டு.

சி. ஜெயசங்கர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More