கடலுக்கும் கரைக்கும் அழகுமுண்டு ……
கடலும் கரையும் அருகருகே – அவை
இணையும் பரப்போ அழகிருப்பே
இயல்பில் அவை ஒத்து இருப்பதில்லை – ஆனால்
இணைவில் அழகிற்கு குறைவு இல்லை.
கடலென்றும் ஓய்ந்தே இருந்ததில்லை
தரையோ அசைந்து திரிந்ததில்லை
பொங்கிப் பெருகிச் சிரித்து வரும் – பெரும்
கடலலை கரையில் தணிந்து கொள்ளும் – அவை
தரைமடி மீதில் அமைதி கொள்ளும் – ஆயினும்
கடலென்றும் ஓய்ததே இருந்ததில்லை
தரையோ அசைந்து திரிந்ததில்லை – அவை
இயல்பில் ஒத்து இருப்பதில்லை – ஆனால்
இணைவில் அழகுகிற்கு குறைவு இல்லை.
அலைகள் அணைந்து அமைதி கொள்ளும்
அலைதொடு கரைதனின் மந்திரத்தில் – மனிதர்
மனங்கள் ஆறி அமைதி கொள்ளும்
கடலுக்கும் கரைக்கும் அழகுமுண்டு
மனித மனங்களை ஆற்றும் குணமுமுண்டு.
சி. ஜெயசங்கர்.

