Home இலங்கைஎழுவைதீவில் 4 இந்திய மீனவர்கள் கைது!

எழுவைதீவில் 4 இந்திய மீனவர்கள் கைது!

by admin

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

எழுவைதீவு கடற்பகுதியை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , நான்கு கடற்தொழிலாளர்களையும் கைது செய்ததுடன் அவர்களின் படகையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட நான்கு கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகையும் காரைநகர் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ள கடற்படையினர் , மேலதிக விசாரணையின் பின்னர் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More