Home இலங்கைஇலுப்பைக்கடவை கடற்பகுதியில்  கூட்டமாக காணப்பட்ட  டொல்பின்கள்  ராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலா.

இலுப்பைக்கடவை கடற்பகுதியில்  கூட்டமாக காணப்பட்ட  டொல்பின்கள்  ராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலா.

by admin

மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில்   இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை முதல்  குறித்த டொல்பின் கூட்டம்  கூட்டம் கூட்டமாக  கரையோர பகுதிகளில் துள்ளி குதித்து  விளையாடி வருகிறது.

இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.

பொதுவாக அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு, இன்று பல டால்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.இந்த அரிய காட்சியை அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டால்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.

இந்த இயற்கை நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More