நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில், துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த விமானி ஒருவருக்கும், ஐந்து கடற்படையினருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வீரமரணத்தை நினைவுபடுத்தும் வகையில், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியை அண்டிய ஸ்ரான்லி வீதியில் அஞ்சலிப் பதாகைகள் கட்டப்பட்டுள்ளன.
💔 மரணமடைந்தவர்கள்:
-
விமானி:
-
கடந்த நவம்பர் 30ஆம் திகதி, நிவாரணப் பணிகளுக்காக வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது, ஹெலிகாப்டர் ஒன்று கிங் ஓயாவில் வீழ்ந்தது.
-
இதில், விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய (வயது 41) உயிரிழந்தார்.
-
-
கடற்படையினர் (5 பேர்):
-
அதே நவம்பர் 30ஆம் திகதி, சுண்டிக்குளம் பிரதேசத்தில் களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் விசேட கடமையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஐந்து கடற்படையினர் உயிரிழந்தனர்.
-
நாட்டின் அவசரத் தேவையின்போது, ஆபத்தை உணர்ந்தும் மக்கள் சேவையை முன்னிறுத்தி உயிர் நீத்த இந்த ஆறு வீரர்களின் தியாகத்தை யாழ்ப்பாணம் மக்கள் கௌரவப்படுத்துகின்றனர்.


