யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
-
சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கிய மொத்தம் 180 நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன.
-
இந்த உதவிப் பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (டிசம்பர் 13) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
-
சிறைச்சாலை அத்தியட்சகர் சீ. இந்திரகுமார், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள் மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த உதவிகளை கையளித்தனர்.
கைதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் இந்தச் செயல், சமூகப் பொறுப்புணர்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்! 💪
#யாழ்ப்பாணம் #யாழ்_சிறைச்சாலை #நிவாரண_உதவி #டித்வா_புயல் #அனர்த்த_உதவி #மனிதாபிமானம் #சமூகப்பணி #Jaffna #PrisonAid #DisasterRelief #DithwaCyclone

