வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, தெற்கு, வடமத்திய மாகாணங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி வரை தொடரும் என யாழ். பல்கலைக்கழக புவியற்திறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
முக்கிய எச்சரிக்கைகள்:
-
கனமழை மற்றும் நிலச்சரிவு: கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு அனர்த்தங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
-
மக்கள் அவதானம்: மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள மக்கள் 19ஆம் திகதி வரை கனமழை மற்றும் நிலச்சரிவு தொடர்பாக அவதானமாகவும் எச்சரிக்கை உணர்வோடும் இருப்பது அவசியம்.
-
பலமான காற்று: வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளுக்கு மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலமான காற்று வீசும் வாய்ப்புள்ளது.
-
குளங்களின் நீர்மட்டம்: வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள பல குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருப்பதால், அடுத்துவரும் நாட்களில் பெய்யும் மழை வான் பாயும் நீரின் அளவை மேலும் அதிகரிக்கக்கூடும்.
#இலங்கை #மழை #மழைஎச்சரிக்கை #கனமழை #நிலச்சரிவு #காலநிலை #வானிலை #வடக்குமாகாணம் #நீர்மட்டம் #யாழ்்பல்கலைக்கழகம் #வெள்ளம் #அவசரகாலநிலை #SriLankaRain #WeatherAlert #LandslideWarning

