Home இலங்கை“பழைய பூங்கா மரங்களை அழிக்க வேண்டாம்; கோப்பாயில் நிலம் தருகிறேன்!”

“பழைய பூங்கா மரங்களை அழிக்க வேண்டாம்; கோப்பாயில் நிலம் தருகிறேன்!”

யாழ். உள்ளக விளையாட்டரங்கு தொடர்பில் கௌரி பென்னையா அதிரடி அறிவிப்பு.

by admin
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்குக்காகப் பழைய பூங்காவிலுள்ள புராதன மரங்களை அழிப்பதற்குப் பதிலாக, தனது சொந்தக் காணியை நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் கந்தையா வைத்தியநாதனின் பேர்த்தியார் கௌரி பென்னையா தெரிவித்துள்ளார்.
📌 முக்கிய விபரங்கள்:
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
📌 அவர் குறிப்பிட்டவை:
📌இயற்கையைப் பாதுகாப்போம்:
உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்காகப் புராதன மரங்களை அழிப்பதை ஏற்க முடியாது. இயற்கையைச் சிதைக்காமல் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும்.
📌காணி நன்கொடை:
எமது பரம்பரைக்குச் சொந்தமான கோப்பாய் பகுதியில் உள்ள காணிகளில் ஒன்றை, இந்த விளையாட்டரங்குக்காக வழங்க நான் தயாராக உள்ளேன்.
📌இளைஞர்களுக்கான வாய்ப்பு:
இளைஞர்கள் அதிகம் வாழும் கோப்பாய் பகுதியில் இந்த அரங்கை அமைப்பது மிகவும் பொருத்தமானது. இது தொடர்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸைச் சந்தித்து எனது இணக்கத்தைத் தெரிவித்துள்ளேன்.
அரசாங்கம் இந்த முன்மொழிவை ஏற்று, இயற்கையைப் பாதுகாத்து கோப்பாய் பகுதியில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More