348
என்ன நடந்தது?
விபத்தின் பின்னணி:
தற்போதைய நிலை:
யாழ்ப்பாணத்தில் ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்பப் பெண் ஒருவர், தனது மகளின் கண் முன்னாலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூளாய் பகுதியைச் சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை), மூளாயிலிருந்து யாழ்ப்பாண நகரில் உள்ள ஆலயம் ஒன்றின் பூஜையில் கலந்து கொள்வதற்காக தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் அர்ச்சனை பொருட்களுடன் பயணித்துள்ளனர்.
அவர்கள் பயணித்த திசைக்கு எதிர் திசையில் வந்த கழிவகற்றும் வாகனத்தை (Gully Bowser), மோட்டார் சைக்கிள் ஒன்று முந்திச் செல்ல முயன்றுள்ளது. இதன்போது ஏற்பட்ட நிலைகுலைவினால், தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சரிந்து விழுந்தது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மகள் வீதியின் ஒரு பக்கமாக விழுந்தார்.
பின்னாலிருந்து பயணித்த தாயார் வீதியின் நடுப்பகுதியில் விழுந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, அதே சமயம் அவ்வழியே வந்த கழிவகற்றும் வாகனம் தாயார் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.
காயமடைந்த மகள் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார், கழிவகற்றும் வாகனத்தின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love

