Home இலங்கை‘மீண்டெழும் இலங்கை’: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

‘மீண்டெழும் இலங்கை’: ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

by admin
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் ‘மீண்டெழும் இலங்கை’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ், மாவட்ட மட்டத்திலான முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (20) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
🗓️ முக்கிய தீர்மானங்கள்:
நிதியுதவி: வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான ரூ. 25,000 மற்றும் வீட்டு உபகரண கொள்வனவுக்கான ரூ. 50,000 கொடுப்பனவுகளை டிசம்பர் 31-ஆம் திகதிக்குள் பயனாளிகளுக்கு வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் நலன்:
பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 15,000 அரசாங்கக் கொடுப்பனவை விரைவாக விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.
வாழ்வாதார மீட்பு:
விவசாயிகளுக்கான விதை விநியோகம், நீர்ப்பாசன திருத்தங்கள், சேதமடைந்த கால்நடை பண்ணைகள் மற்றும் சிறு வணிகங்களை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மீள்குடியேற்றம்:
அபாயகரமான பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் மற்றும் வீடுகளை இழந்தோருக்கான இழப்பீடுகளை வெளிப்படையான முறையில் வழங்குதல்.
ஆவணங்கள்:
அனர்த்தங்களால் தொலைந்த கடவுச்சீட்டுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தகுதியுள்ள பயனாளிகளும் விடுபடாமல் நன்மைகளைப் பெறுவதை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் துறைசார் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More