தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நடந்தது என்ன?
-
போராட்டத்தின் நோக்கம்: தனியார் காணிகள் அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டமைக்கு எதிராகவும், விகாரதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-
தடையுத்தரவு: இப்போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றிருந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 29 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
-
கைது நடவடிக்கை: தடையையும் மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பொலிஸாருடன் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து வேலன் சுவாமிகள், கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் 3 உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத் தீர்ப்பு: கைது செய்யப்பட்ட ஐவரையும் பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களைப் பிணையில் விடுவிக்க மன்று உத்தரவிட்டது.
#Thaiyitti #Protest #Jaffna #VelanSwamigal #HumanRights #NorthernSri Lanka #MallakamCourt #TamilRights #LandRights #BreakingNews

