455
NPP முக்கியஸ்த்தர்கள் நெறி தவறுகிறார்களா?
தீவிரமடையும் விசாரணை.
வைத்திய பரிசோதனை: இச்சம்பவத்தின் போது குறித்த காவற்துறை கான்ஸ்டபிள் மதுபோதையில் இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்த அவர் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மறுப்பு:
சிசிடிவி காட்சிகள்:
இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார அவர்கள், ஒரு காவற்துறை கான்ஸ்டபிளைத் தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சம்பவம் என்ன?
சூரியகந்த காவல் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தன்னைத் தாக்கியதாக காவற்துறை அவசர அழைப்புப் பிரிவுக்குப் புகார் அளித்துள்ளார். குறித்த கான்ஸ்டபிள், அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினரின் எம்பிலிப்பிட்டிய வீட்டில் கஞ்சா சுற்றிவளைப்பு ஒன்றில் ஈடுபட்டவர் எனக் கூறப்படுகிறது.
வெளியாகும் அதிரடித் தகவல்கள்:
தான் யாரையும் தாக்கவில்லை எனத் தெரிவித்துள்ள சாந்த பத்மகுமார, குறித்த கான்ஸ்டபிள் தனது வாகனத்தை வழிமறித்து அச்சுறுத்தியதாக கொலன்ன காவல் நிலையத்தில் எதிர்முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகள் மற்றும் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு எம்பிலிப்பிட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மனைவியின் கருத்து:
தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் கான்ஸ்டபிளின் மனைவி தெரிவிக்கையில், தனது கணவர் தொலைபேசி மூலம் தகவல் வழங்கிய பின்னரே தாம் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை என்ன? சட்டத்தின் முன் அனைவரும் சமமா? காவற்துறையினரின் விசாரணை முடிவிலேயே முழுமையான உண்மைகள் வெளிவரும்.
Spread the love

