தையிட்டியில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல், நாடு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதை வெளிப்படையாகக் காட்டுகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
📍 காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான செயல்: திருகோணமலையில் காவல்துறை அதிகாரியை பௌத்த பிக்கு ஒருவர் அறைந்தபோது அமைதி காத்த காவல்துறையினர், தையிட்டியில் சைவத் துறவியான வேலன் சுவாமிகளை மிகவும் கொடூரமாக இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். வேலன் சுவாமி ஒரு பௌத்த பிக்குவாக இல்லாததுதான் இந்த பாரபட்சத்திற்குக் காரணமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
📍 சட்ட நடவடிக்கை: தாக்குதலுக்கு உள்ளான வேலன் சுவாமிகள், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்குப் பக்கபலமாக சட்டத்தரணியாக தானும் தனது கட்சியும் முன்னிற்கும் என அவர் உறுதியளித்தார்.
📍 பிரதேச சபைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்: சாதாரண குடிமகன் அனுமதி இன்றி கட்டடம் கட்டினால் நடவடிக்கை எடுக்கும் வலி. வடக்கு பிரதேச சபை, தையிட்டியில் உள்ள சட்டவிரோத விகாரைக் கட்டுமானங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
சைவ மகா சபை கடும் கண்டனம்! 🛕🔥
வேலன் சுவாமிகள் மீதான தாக்குதலை அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.
“ஒரு மதத் துறவி மீது இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டது ஒட்டுமொத்த சைவ சமயத்தையே அவமதிக்கும் செயலாகும். தனியார் காணியில் அடாத்தாகக் கட்டப்பட்டுள்ள ஒரு கட்டிடத்திற்காக, சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே சட்டமீறலில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு உடனடி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதன் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔗 விரிவான செய்திகளுக்கு: www.globaltamilnews.net
#Jaffna #Thaiyitti #TamilRights #PoliceBrutality #VManivannnan #VaelanSwamigal #HumanRights #JusticeForTamils #SriLanka #GlobalTamilNews #SaivaMahaSabai #TamilPolitics

