Home இலங்கைகண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு!

by admin
கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் ஊடாகக் கிடைத்த அநாமதேய தகவலை அடுத்து, அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
📝 முக்கிய விபரங்கள்:
அநாமதேயத் தகவல்: மாவட்ட செயலகத்திற்கு மின்னஞ்சல் (Email) மூலம் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பலப்படுத்தல்: தகவல் கிடைத்த உடனடியாக காவல்துறையினா் , காவல்துறைவிசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் மோப்ப நாய் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
சோதனை நடவடிக்கை: செயலகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலை: செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அச்சுறுத்தல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More