Home இலங்கைடித்வாசூறாவளி: முன்னெச்சரிக்கை விடுக்கத் தவறிய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு! ⚖️🌪️

டித்வாசூறாவளி: முன்னெச்சரிக்கை விடுக்கத் தவறிய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு! ⚖️🌪️

by admin
“டித்வா” சூறாவளி குறித்து உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கத் தவறிய அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு எதிராக, ஜனவரி 15-ஆம் திகதிக்குள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்ய இலவச வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
வானிலை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களங்கள் போதிய முன்னெச்சரிக்கை வழங்காததால் பாரிய உயிர் மற்றும் சொத்து இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இது ஒரு பொறுப்பற்ற செயல் எனவும் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தினேஷ் விதானபத்திரண தெரிவித்துள்ளார்.
2019 ஈஸ்டர் தாக்குதல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, மக்களின் பாதுகாப்பில் தவறிய அதிகாரிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க இவ்வழக்கு வழிவகுக்கும்.இந்த வழக்கில்பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத் தலைவர்கள் மற்றும் வர்த்தகர்கள் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர், வானிலை மற்றும் நீர்ப்பாசனத் துறை பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் இதில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள  நிலையில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக சங்கம் அறிவித்துள்ளது.
“டித்வா” (Ditwah) சூறாவளி இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் இந்த வழக்கின் பின்னணி குறித்த முக்கிய விவரங்கள்:
நாட்டின் 25 மாவட்டங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
உலக வங்கியின் (GRADE) மதிப்பீட்டின்படி,  மொத்த சேதத்தின் மதிப்பு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  மேலும் நவம்பர் 28-ல் புயல் கரையை கடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் இருந்தும், அரசு இயந்திரம் மக்களை வெளியேற்றத் தவறியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் (முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அபராதம்) வழங்கப்பட்ட தீர்ப்பு, இங்கும் “அரசின் கடமை தவறியமைக்கு” (Negligence of Duty) ஒரு வலுவான சட்ட முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More