Home இலங்கைமன்னார் துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

மன்னார் துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

by admin

 

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை, 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) மன்னார் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (02.01.26) அனுமதி வழங்கியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி:

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர், மன்னார் காவற்துறையினரால் முருங்கன் காவல்  நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடனும் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதி, குற்ற விசாரணைப் பிரிவினர் (CID) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

நீதிமன்ற நடவடிக்கை:

  • பயங்கரவாத தடைச்சட்டம்: குறித்த நபர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு CID அலுவலகத்தில் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டார்.
  • விளக்கமறியல்: இன்று மதியம் 1 மணியுடன் அந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தேக நபரை வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் முதலில் உத்தரவிட்டது.
  • 90 நாள் அனுமதி: அதன் பின்னர், பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து (ஜனாதிபதி) தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து CID யினர் தாக்கல் செய்த நகர்தல் பத்திரம் மூலம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கினார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களைச் சட்டத்தரணி எஸ்.டினேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

#Mannar #ShootingIncident #CID #SriLankaPolice #CourtNews #MannarNews #LegalUpdate #SriLanka #TamilNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More