Home உலகம்வெனிசுலாவில் பதற்றம்: 14 ஊடகவியலாளர்கள் அதிரடி கைது!

வெனிசுலாவில் பதற்றம்: 14 ஊடகவியலாளர்கள் அதிரடி கைது!

by admin
வெனிசுலாவில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் இராணுவத் தலையீடுகள் குறித்த செய்திகளை வெளியிட்ட 14 ஊடகவியலாளர்களை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க இராணுவப் படைகள் வெனிசுலா தலைநகரைத் தாக்கி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்தச் சூழலை அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களே தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 14 பேரில் ஒருவர் தவிர, மற்ற அனைவரும் சர்வதேச ஊடக நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் என வெனிசுலா ஊடகத் தொழிலாளர் சங்கம் (SNTP) உறுதிப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் கடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணையின் பின் சிலர் விடுவிக்கப்பட்ட போதிலும், ஒரு ஊடகவியலாளரை நாடுகடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போர்க்காலச் சூழலில் உண்மைகளை உலகுக்குக் கொண்டு செல்லும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளன.
வெனிசுலாவின் தற்போதைய அரசியல் மாற்றம் மற்றும் ஊடகவியலாளர்களின் நிலை குறித்த மேலதிக தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More