கம்பஹா, நால்ல (Nalla) காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத கால்நடை கடத்தலைத் தடுக்க முயன்ற போதே காவல்துறையினா் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இன்று (ஜனவரி 25, 2026) அதிகாலை 2.35 மணியளவில் தலஹேன சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நால்ல காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் முச்சக்கரவண்டியில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வீதியோரம் நின்ற சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றைப் பரிசோதித்தனர்.
இதன்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த லொறியில் மாடுகளை ஏற்றிக் கொண்டிருந்ததைக் கண்ட காவல்துறையினா் அவர்களைக் கைது செய்ய முயன்றனர்.
இதன்போது லொறியில் இருந்த நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளைத் தாக்க முற்பட்டுள்ளார். இதனால் தற்காப்புக்காகவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் இடது கையில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் (அவரது உயிருக்கு ஆபத்தில்லை).
அத்துடன் லொறியில் இருந்த ஏனைய நான்கு சந்தேக நபர்களும் தப்பியோடியுள்ளனர். தற்போது காவல்துறையினா் குறித்த லொறியைக் கைப்பற்றியுள்ளதுடன், தப்பியோடிய ஏனைய நான்கு பேரையும் கைது செய்ய விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Tag Words: #NallaPolice #CattleSmuggling #SriLankaPolice #ShootingIncident #GampahaNews #CrimeUpdate #LKA #NightPatrol #BreakingNewsSL

