Home இலங்கையாழுக்கு மணல் கடத்தி வந்த இருவர் கைது – ஒரு டிப்பர் தப்பியோட்டம்

யாழுக்கு மணல் கடத்தி வந்த இருவர் கைது – ஒரு டிப்பர் தப்பியோட்டம்

by admin

யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றினை காவல்துறையினா்  மடக்கி பிடித்ததுடன் , டிப்பர் சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்துள்ளனர்.  மற்றுமொரு டிப்பர் வாகனம் காவல்துறையினரின் கட்டளையை மீறி தப்பி சென்றுள்ள நிலையில் , அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மருதனார்மடம் பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் காவல்துறையின வீதியில் பயணித்த இரு டிப்பர் வாகனங்களை வழிமறித்த நிலையில் , காவல்துறையினரின் கட்டளையை மீறி வாகனத்தை தொடர்ந்து சாரதிகள் செலுத்த முற்பட்ட வேளை ஒரு டிப்பர் வாகனத்தை  காவல்துறையினர் மடக்கி பிடித்த நிலையில் மற்றைய வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரை காவல்துறையின  கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட வேளை, உரிய அனுமதிகள் இன்றி கிளாலி பகுதியில் இருந்து மணலை ஏற்றி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
குறித்த டிப்பர் வாகனங்கள் கொடிகாமம் , சாவகச்சேரி மற்றும் கோப்பாய் காவல்துறைப் பிரிவுகளை தாண்டி சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி சென்ற நிலையில்  சுன்னாகம் காவல்துறையினரினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tag Words: #JaffnaCrime #SandSmuggling #ChunnakamPolice #IllegalMining #JaffnaNews #PoliceCrackdown #LKA #TrafficEnforcement #NorthernProvince
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More