Home இலங்கை⚖️ “துபாய் சுதா”வின் மால்டோவா வேலைவாய்ப்பு மோசடி   –  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்   எச்சரிக்கை!

⚖️ “துபாய் சுதா”வின் மால்டோவா வேலைவாய்ப்பு மோசடி   –  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்   எச்சரிக்கை!

by admin

துபாய் சுதா” (Dubai Sudda) என அழைக்கப்படும் நபர், ஐரோப்பிய நாடான மால்டோவாவில் (Moldova) வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நடத்தி வரும் பாரிய மனிதக் கடத்தல் மற்றும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ச்சிகரமான வீடியோக்களை வெளியிட்டு, அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் இந்த நபருக்கு எதிராகப் பல புகார்கள் குவிந்துள்ளன.

“துபாய் சுதா” தனது சமூக வலைத்தள பக்கங்களில், ஐரோப்பிய நாடான மால்டோவாவில் கைநிறைய சம்பளத்தில் வேலை இருப்பதாக வீடியோக்களைப் பதிவேற்றி வந்துள்ளார். இதனை நம்பி அவருக்குப் பணம் செலுத்திய பலர், ஏமாற்றப்பட்டதோடு எந்தவொரு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் பணிபுரியும் சில இலங்கையர்கள், தாங்களே முகவா்கள் போலச் செயல்பட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக வேலைவாய்ப்பு தருவதாகக் கூறிப் பணம் திருடும் போக்கு அதிகரித்து வருவதாகப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான ஆட்களைச் சேர்த்தல், விளம்பரம் செய்தல், பணம் வசூலித்தல் அல்லது கடவுச்சீட்டு நடைமுறைகளைக் கையாளுவதற்கு முறையான செல்லுபடியாகும் உரிமம் (License) கட்டாயம் இருக்க வேண்டும்.

பின்னணி அல்லது அந்தஸ்தைப் பார்க்காமல் இவ்வாறான மோசடியாளர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாகப் பாயும் என பணியகம் எச்சரித்துள்ளது. இவரால் அல்லது இவ்வாறான மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகப் பணியகத்தில் புகார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tag Words: #DubaiSudda #MoldovaJobScam #HumanTrafficking #SLBFE #SriLankaNews #ForeignEmployment #SocialMediaScam #FraudAlert #LKA #BreakingNews2026

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More