சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷான்சி (Shanxi) மாகாணத்தில் நேற்று (சனிக்கிழமை, பிப்ரவரி 7, 2026) நிகழ்ந்த பயங்கர தொழிற்சாலை வெடிப்புச் சம்பவ உயிாிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளது. ஷான்சி மாகாணத்தின் ஷுவோசோ (Shuozhou) நகரில் உள்ள ஜியாபெங் பயோடெக்னாலஜி (Jiapeng Biotech) நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆரம்பத்தில் 5 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை (பிப்ரவரி 8) நிலவரப்படி பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
இந்தத் தொழிற்சாலை மலைப்பகுதியொன்றில் அமைந்துள்ளதால், மீட்புப் பணிகளில் சவால்கள் நிலவின. வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து அடர்த்தியான மஞ்சள் நிறப் புகை வெளியேறுவதை அவதானிக்க முடிந்தது.
விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சாலையின் சட்டபூர்வ பிரதிநிதி (Legal Representative) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், விலங்குத் தீவனம், நிலக்கரி பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தது.
சீனாவின் தொழிற்சாலைகளில் பாதுகாப்புத் தரநிலைகள் குறைவாக இருப்பதால் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த ஜனவரி மாத இறுதியில், அண்டை மாகாணமான உள் மங்கோலியாவில் உள்ள எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Tag Words: #ChinaExplosion #ShanxiBlast #IndustrialAccident #BiotechFactory #BreakingNews2026 #SafetyAlert #ChinaNews #LKA

