164
சிறுவர்களுக்கு வன்முறை வீடியோ கேம்கள் தடையா? பிரான்ஸின் முக்கிய நகர்வு!
சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும், சமூகத்தில் வன்முறை எண்ணங்கள் பரவுவதைத் தடுக்கவும் பிரெஞ்சு அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வன்முறை வீடியோ கேம்கள் சிறுவர்களின் மனநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை ஜனாதிபதி மக்ரோன் அமைத்துள்ளார். இதன் அறிக்கை 2026 மே அல்லது ஜூன் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும்.
“தினமும் 5-6 மணிநேரம் வன்முறை கேம்களில் மூழ்கியிருக்கும் ஒரு சிறுவன், நிஜ வாழ்க்கையில் கோபம் வரும்போது தனது கட்டுப்பாட்டை இழந்து வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது” என மக்ரோன் கவலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டமூலம் பிரான்சில் விவாதிக்கப்பட்டு வருகிறது (செப்டம்பர் 2026 முதல் அமல் படுத்தத் திட்டம்). கடந்த 2023-ல் பிரான்சில் நடந்த கலவரங்களின்போது, இளைஞர்கள் வன்முறை வீடியோ கேம்களில் வருவதைப் போலவே தெருக்களில் நடந்துகொள்வதாக மக்ரோன் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை சிறுவர்களின் எதிர்காலத்திற்கு அவசியமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா? உங்கள் கருத்துக்களை கீழே பகிருங்கள்! 
Spread the love

