Home இலங்கைஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம் – 18 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய திட்டம்

ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம் – 18 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய திட்டம்

by admin

ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம் – 18 மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய திட்டம்

வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் புதன்கிழமை அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாண ஆளூநர் நா,வேதநாயகம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். பவானந்தராசா , ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன் , வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த வீதியானது 6.03 கிலோ மீற்றர்  நீளம் எனவும், 680 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், இவ்வீதி முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, 18 மாதங்களின் பின்னராக,  12.05.2027 அன்று மக்கள் பாவனைக்காக மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

#RoadDevelopment #NorthernProvince #Avarangal #Thondamanaru #Infrastructure #SriLanka #RoadConstruction #DevelopmentNews #Jaffna #மறுமலர்ச்சிக்கானபாதை #வீதிப்புனரமைப்பு #யாழ்ப்பாணம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More