ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானிய) துணைப் பிரதமர் டேவிட் லாம்மி (David Lammy), ஒரு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று (பெப்ரவரி 17, 2026, செவ்வாய்க்கிழமை) காலை இலங்கை சென்றடைந்துள்ளாா். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த டேவிட் லாம்மி மற்றும் அவரது குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை 07 உயர் அதிகாரிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த அவரை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்ட குழுவினர், விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையில் (VIP Lounge) வைத்து வரவேற்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, டேவிட் லாம்மி உள்ளிட்ட குழுவினர் இன்று மாலை மீண்டும் பிரித்தானியா நோக்கிப் புறப்படவுள்ளனர்.
பிரித்தானிய துணைப் பிரதமர் மற்றும் அவரது குழுவினர் இன்று இலங்கையில் தங்கியிருக்கும் சில மணிநேரங்களில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், காலநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய துறைகளில் முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவுடனான சந்திப்பின் போது, இலங்கையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பிரித்தானியாவின் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்படலாம்.
Tag Words:
#DavidLammy #UKSRILANKA #DiplomaticVisit #KatunayakeAirport #SriLankaPolitics #BritishHighCommission #LKA #UKPolitics

