Home இலங்கைஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் கைது!

ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் கைது!

by admin
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் 450 கிலோ மீனுடன் கைது.
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் மீனுடன் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்து டைனமைட் வெடிபொருள் பாவித்து பிடிக்கப்பட்ட சுமார் 450 கிலோ மீன் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன், வாகனம் ஒன்றும், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More