Home இலங்கைவெடி பொருட்களுடன் கைதான இரு மீனவர்களுக்கு விளக்கமறியல்

வெடி பொருட்களுடன் கைதான இரு மீனவர்களுக்கு விளக்கமறியல்

by admin

மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் ‘டைனமோட்’ வெடி பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழன் (19) உத்தரவிட்டுள்ளது.

மன்னார்- தாழ்வுபாடு பகுதியில் இன்று வியாழன் ?(19) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமோட் வெடி பொருளை வைத்திருந்த இரு மீனவர்களை ஓலைத்தொடுவாய் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் மூன்று தொகுதி டைனமோட் வெடிபொருள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர் களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று வியாழன் மதியம் குறித்த இரு சந்தேக நபர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் இரு மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரம் கைப்பற்றப்பட்ட ‘டைனமோட்’ வெடி பொருட்கள இரசாயன பகுப்பாய்வுக்கு என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

டைனமைட் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது இலங்கை சட்டப்படி ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். இது மீன் குஞ்சுகள் மற்றும் பவளப்பாறைகளை அழிப்பதன் மூலம் கடல் சார் உயிரியல் பன்முகத்தன்மைக்கு (Marine Biodiversity) ஈடுசெய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்துகிறது

#MannarNews #IllegalFishing #DynamiteFishing #SriLankaNavy #MaritimeLaw #Thazhvupadu #LKA #BreakingNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More