159
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் இன்று (பெப்ரவரி 22, 2026) அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நங்கர்ஹார் (Nangarhar) மற்றும் பக்திகா (Paktika) ஆகிய மாகாணங்களில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் ஐஎஸ் (IS-K) பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
குறிப்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் மற்றும் பன்னு (Bannu) பகுதியில் இராணுவக் குழுவினர் மீதான தாக்குதல் ஆகியவற்றிற்குப் பிறகு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நங்கர்ஹார் மாகாணத்தில் மட்டும் சுமார் 17 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் போர் விமானங்கள் இன்னும் சில பகுதிகளில் பறந்து வருவதாகவும், மேலதிக தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
தங்கள் மண்ணில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களே காரணம் என பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், தாலிபான் அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. இந்த வான்வழித் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
________________________________________
Spread the love

