Home உலகம்மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை – சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!

மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை – சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!

by admin
மெக்சிகோவின் (Mexico) மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடற்கரை சுற்றுலா நகரமான Puerto Vallartaவில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ இராணுவம் நடத்திய விசேட நடவடிக்கையில் Jalisco New Generation Cartel (CJNG) அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஆயுததாரிகள் நகரின் பல பகுதிகளையும் சர்வதேச விமான நிலையத்தையும் முற்றுகையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்குப் பின்னர் நகரில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வாகனங்கள் தீவைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக Puerto Vallarta International Airport நோக்கிச் செல்லும் முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு படைகள் கூடுதல் வீரர்களை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
CJNG அமைப்பு, மெக்சிகோவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வன்முறைக்கு பெயர் பெற்ற போதைப்பொருள் கும்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட நடவடிக்கை, குறித்த அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசு தரப்பில் இருந்து சுற்றுலா பயணிகள் அமைதியாக இருக்குமாறு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தால் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியாகும் போது புதுப்பிக்கப்படும்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More