தற்பொழுது இலங்கையினுடைய பேசுபொருளாக காணப்படுகின்றது, இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடான அல்லது பதிலீடான ஒரு சட்டமூலத்தை , அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம் தொடர்பாக மக்களுடைய கருத்துக்களை கேட்டறியும் ஒரு செயல்பாடானது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருக்கின்ற அவ்வளவு அம்சமும் புதிதாக வருகின்ற சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டு இருப்பது, இலங்கையினுடைய அரசியலமைப்பில் அடிப்படை உரிமையை ஒரு பாதிக்கின்ற அல்லது அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் அமைந்து காணப்படுகிறது. ஒரு அரசியலமைப்பிலே ஒரு உறுப்புரையை மாற்ற வேண்டும் என்று சொன்னால் அல்லது அதனுடைய அடிப்படைத் தன்மையை மாற்ற வேண்டும் என்று சொன்னால் சர்வசன வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலமாகவே அச்சரத்துக்கள் திருத்தப்பட முடியும்.
அப்படியிருக்க, இலங்கையினுடைய அடிப்படை உரிமையை கேள்விக்குட் படுத்துகின்ற இந்த சட்டமானது, இலங்கையினுடைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கமானது கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்திலே, அது மக்களுடைய உணர்வுகளை புண்படுத்தகூடிய வகையில் அமைந்து காணப்படும் என்ற விடயத்தினை நாங்கள் ஆணித்தரமாகச் சொல்ல விரும்புகின்றோம்.
அதுமாத்திரமல்ல, இந்த சர்வதேச ரீதியாகவும் சரி அல்லது சர்வதேச ரீதியிலே அங்கீகரிக்கப்படாத அல்லது தமிழ் மக்கள் மாத்திரமல்ல பெரும்பான்மை மக்களும் எதிர்க்கும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் எங்களுடைய இந்த இலங்கை நாட்டிற்கு பொருத்தமில்லை.

#மன்னார் #பயங்கரவாதஎதிர்ப்புச்சட்டம் #MESEDO #மன்னார்_செய்திகள் #NoToATA #HumanRightsSL
