Home இலங்கைபாலை தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்குச் சென்ற படகு விபத்து – ஒருவர் உயிரிழப்பு – பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

பாலை தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்குச் சென்ற படகு விபத்து – ஒருவர் உயிரிழப்பு – பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

by admin

 

யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளளார் . பலர் கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் , குருநகர் பகுதியில் இருந்து ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கடலில் விபத்துக்கு உள்ளானதில் , படகில் இருந்த பலரும் கடலினுள் விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், படகில் பயணித்தவர்கள் எண்னிக்கை தெரியாத நிலையில் கடலில்  மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் அப்பகுதி கடற்தொழிலாளர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More