டித்வா புயலால் பாதிக்கப்பட்ட தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தலா 2 இலட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில், தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் பாவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலாளர், தெல்லிப்பழை பிரதேச சபை உறுப்பினர் மிதுசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, புயலால் பாதிக்கப்பட்ட வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தனர்.

#டித்வாபுயல் #தெல்லிப்பழை #இழப்பீடு #வியாபாரநிலையங்கள் #சண்முகநாதன்பாவானந்தராஜா #உள்ளூர்செய்தி #Tellippalai #DithwaCyclone #Compensation

