250
இந்த தாக்குதலில் ஏவுகணைச் சிதறல்கள் மற்றும் இடிபாடுகள் காரணமாக 23 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 10 வயது சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவி வரும் போர்ப் பதற்றத்தின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. மார்ச் 20-21 நள்ளிரவு முதல் டிமோனா நகர் மீது நடத்தப்பட்ட ஏவது தாக்குதல் இதுவாகும்.
திகதி: மார்ச் 21, 2026
இஸ்ரேலின் தெற்குப் பகுதியிலுள்ள டிமோனா (Dimona) நகர் (அணு உலை நிலையத்திற்கு அருகில்) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், சிறுவன் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அணு ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை நேரடியாகத் தாக்கியதில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததுடன், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
இஸ்ரேலின் அவசர சிகிச்சைப்பிரிவான ‘மேகன் டேவிட் அடோம்’ (MDA) காயமடைந்தவர்களை மீட்டு சோரோகா மருத்துவமனையில் (Soroka Medical Center) அனுமதித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு அருகில் அணு ஆராய்ச்சி நிலையம் இருந்தபோதிலும், அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது.
ஈரானின் நட்ான்ஸ் (Natanz) அணுசக்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச அணுசக்தி முகமையகம் (IAEA) நிலைமையைக் கண்காணித்து வருவதுடன், அணுக்கதிர்வீச்சு அபாயம் ஏதுமில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
Spread the love

