Latest News
பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக...
வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை...
அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்:
  தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு!
பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்; ஜூலை 24 வரை மட்டக்களப்பு நீதிமன்றம்...
யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க...
பிரித்தானியாவில் வாழ்பவர்களின் கவனத்திற்கு!
“வரி செலுத்தாதோர் சிறை செல்ல நேரிடும் என்ற பயத்தால் வரியைச்...
தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு
யாழ்ப்பாணம் பலாலியில் நில மீட்புப் போராட்டம் 4-ஆவது வாரமாகத் தீவிரம்:
  • English
  • සිංහල
  • Contact
Global Tamil News
Banner
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Home இலங்கைமுதலீட்டாளர்களை வடக்கு நோக்கி ஈர்ப்பதற்குத் அதிகாரத்துவ நடைமுறைகள் தடையாகவுள்ளது
இலங்கைபிரதான செய்திகள்

முதலீட்டாளர்களை வடக்கு நோக்கி ஈர்ப்பதற்குத் அதிகாரத்துவ நடைமுறைகள் தடையாகவுள்ளது

by admin March 24, 2026
written by admin March 24, 2026
233

 

முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் காணப்படுவதாக ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில்,

வடக்கில் கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாகப் பலரது காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. தற்போது மக்களிடமும் காணி ஆவணங்கள் இல்லை, அரச திணைக்களங்களிடமும் அதற்கான பதிவுகள் இல்லை. இதனால் தமது காணிகளுக்கான உரித்துகளை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மக்கள் தொடர்ச்சியாகப் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் ஆளுநர் செயலகத்துக்கும் அதிகளவில் வருகை தருகின்றனர்.எனவே, அவர்களின் காணிப் பிணக்குகளைத் துரிதமாகத் தீர்த்து, உரிய காணி உரித்துகளை வழங்க வேண்டியது எமது மிக முக்கிய தேவையாகும். இதற்காக அரசாங்கம் ஏற்கனவே ‘ஹிமிகம’ (உரிமை) திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.

அத்துடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சிகளை மேம்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒற்றைச் சாளர முறைமையை உருவாக்குதல், தொழில்நுட்ப ஆதரவைப் பெறுதல், மற்றும் பசுமைக் காலநிலை நிதி போன்ற சர்வதேச நிதியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஐ.நா.வின் ஒத்துழைப்புக்கள் மாகாணத்துக்கு அவசியம் என ஆளுநர் தெரிவித்தார்,

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த  ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர்,

பசுமைக் காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேத நிதி, கடன் பரிமாற்றங்கள் மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய அபிவிருத்திப் பத்திரங்கள் போன்ற புதிய நிதியீட்டல் முறைகள் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு அதிகபட்ச உதவிகளை வழங்க ஐ.நா. தயாராகவுள்ளது.
அத்துடன் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் முதலீடுகளை வடக்கிற்கு ஈர்ப்பதற்குத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனத் தொிவித்தாா்.

அதன் போது முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக உள்ள கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

ஆளுநர் மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரின் கருத்துக்களை தொடர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்கள், தமது மாவட்டங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியனவற்றுடன் தொடர்புடையதாக மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகச் சுட்டிக்காட்டினர்.

அதேபோல, கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும், தமது மாவட்டத்தில் நிலவும் பல்வேறுபட்ட காணிப் பிணக்குகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். இறுதியாகக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண காணி ஆணையாளர்,மாகாணத்தில் சுமார் 2 இலட்சம் காணி ஆவணங்கள் கையாளப்பட வேண்டியுள்ளதைக் சுட்டிக்காட்டினார்.

இந்த கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், மாவட்டச் செயலாளர்கள், மாகாணக் காணி ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

 
#UN #SriLanka #NorthernGovernor #LandDisputes #ForeignInvestment #GreenClimateFund
Spread the love
 
 
 Tweet     
ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளா்தடைமுதலீட்டாளர்கள்வடக்கு   அதிகாரத்துவ நடைமுறைகள்வடக்கு மாகாண ஆளுநர்
0 comments 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
வடமாகாண ஆளுநர் ,யாழ்.மாவட்ட கட்டளை தளபதியிடையில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
next post
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: கலக்கத்தில் இஸ்ரேல்? பின்னணியும் தற்போதைய நிலவரமும்!

Related News

பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக...

July 13, 2026

வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை...

July 13, 2026

அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்:

July 13, 2026

  தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு!

July 13, 2026

யோஷித ராஜபக்ஷவின் பணமோசடி வழக்கு: முன்னாள் காதலி யசரா அபேநாயக்க...

July 13, 2026

பிரித்தானியாவில் வாழ்பவர்களின் கவனத்திற்கு!

July 13, 2026

“வரி செலுத்தாதோர் சிறை செல்ல நேரிடும் என்ற பயத்தால் வரியைச்...

July 13, 2026

தெல்லிப்பளையில் “அன்ன சத்திர மண்டபம்” திறப்பு

July 13, 2026

யாழ்ப்பாணம் பலாலியில் நில மீட்புப் போராட்டம் 4-ஆவது வாரமாகத் தீவிரம்:

July 12, 2026

விஜயைச் சந்தித்த பேரவை – நிலாந்தன்.

July 12, 2026

Recent Posts

  • பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை உடனடியாக அகற்றுமாறு  நீதிமன்றம்  உத்தரவு! July 13, 2026
  • வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக் காணொளியை வெளியிட்ட பொதுமக்கள்! July 13, 2026
  • அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்: July 13, 2026
  •   தமிழ் மொழி மூல காவற்துறையினருக்கான உன்னத விசேட செயலமர்வு! July 13, 2026
  • பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்; ஜூலை 24 வரை மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு! July 13, 2026




  • English
  • සිංහල
  • Contact

@2023 - Global Tamil News, All Right Reserved.

Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
Global Tamil News
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • விளையாட்டு
  • பெண்கள்
  • இலக்கியம்
  • ஏனையவை..
    • முஸ்லீம்கள்
    • புலம்பெயர்ந்தோர்
    • மலையகம்
    • கேலிச்சித்திரம்
    • பேட்டிகள்
      • காணொளிகள்
      • ஒலி வடிவம்
    • மௌனம் கலைகிறது
@2023 - Global Tamil News, All Right Reserved.

Read alsox

பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை...

July 13, 2026

வலி. வடக்கில் ராணுவத்தினர் மரக்கறி விற்பனை செய்யும் ஆதாரக்...

July 13, 2026

அமிர்தலிங்கத்தின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல்:

July 13, 2026

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More