195
ஈரான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் இராஜதந்திர நடவடிக்கைகள் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அணு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த தருணங்களில் இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, இதனை “இராஜதந்திரதிற்கான துரோகம்” என ஈரான் வர்ணித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை விளக்குவதற்காக, வெளியுறவு அமைச்சக பேச்சாளர் எஸ்மாயில் பகாயி இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் முக்கியமான தகவல்களை வெளியிட்டார்.
கடந்த ஒன்பது மாதங்களுக்குள், அணு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த நேரத்திலேயே இருமுறை இரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்களை விளக்கும்பொது, அமெரிக்கா “பேச்சுவார்த்தை மேசையை முறியடித்து நேரடியாக தாக்குதல் நடத்தியது” என அவர் குற்றம்சாட்டினார். இதன் மூலம் அமெரிக்கா உண்மையில் தூதரக நடைமுறைகளில் சீரியஸாக இல்லை என்பதையும், உலகில் யாரும் அமெரிக்க இராஜதந்திரத்தை நம்ப முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் போராட்டம் மூன்றாவது வாரத்தை கடந்துள்ள நிலையில், ஈரானின் நகரங்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த தாக்குதல்களை ஈரான் “சட்டவிரோதமான போர்” மற்றும் “போர்க்குற்றங்கள்” என குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், அமெரிக்கா முன்வைக்கும் சமாதான பேச்சுக்கள் அல்லது இடைமுக முயற்சிகள் உண்மையானவை அல்ல, மாறாக இராணுவ முன்னிலை பெறுவதற்கான ஒரு மூடி நடவடிக்கையாகவே இருக்கின்றன என்று இரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானுக்கு நெருக்கமான ஊடகங்கள், குறிப்பாக Mehr News போன்றவை, “உலகில் யாரும் அமெரிக்க இராஜதந்திரத்தை நம்ப முடியாது” என்ற பகாயியின் கருத்தை வலுப்படுத்தி பரப்பி வருகின்றன.
அதேசமயம், சர்வதேச மற்றும் பிராந்திய ஊடகங்களில், போர் மற்றும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட பிறகே இரான் மீண்டும் தூதரக பேச்சுவார்த்தைகளை பரிசீலிக்கும் என்றும், அதற்கு முன் பொறுப்புணர்வு மற்றும் இழப்பீடு தொடர்பான விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடந்து வரும் இந்த மோதல் உலக அரசியல் நிலைப்பாடுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதிக்கான வாய்ப்புகளை சிக்கலாக்கியுள்ளது.
Spread the love

