லண்டனில் மேயாின் பாதுகாப்பு காவல்துறையினரின் பெரிய தவறு – ஆயுதங்கள் கொண்ட பை வீதியில் விட்டுச் செல்லப்பட்டது

by admin

லண்டன் நகரின் மேயா்  சாதிக் கானுக்கு பாதுகாப்பு வழங்கும் ஆயுதப்படை  காவல்துறையினரால்  ஏற்பட்ட மிகக் கடுமையான பாதுகாப்பு தவறு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர்களின் பாதுகாப்பு பணியின் போது, மேயரின் இல்லம் அருகிலுள்ள ஒரு வீதியில் ஆயுதங்கள் அடங்கிய பையை அவர்கள் தவறுதலாக அங்கு விட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.

வீதியில் விடப்பட்ட அந்தப் பையில் மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் Heckler & Koch வகை சப் மெஷின் கன், Glock பிஸ்டல், Taser கருவி மற்றும் போதுமான அளவு வெடிகுண்டுகள் (ammunition) இருந்தன. இத்தகைய ஆயுதங்கள் பொதுமக்கள் அணுகக்கூடிய இடத்தில் இருந்தது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதில் தொடர்புடைய ஐந்து  காவல்துறை அதிகாரிகள் தற்காலிகமாக முன்களப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உள்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தவறு எவ்வாறு ஏற்பட்டது, பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது போன்ற அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து  லண்டன் மாநகரக் காவற்துறை  அதிகாரப்பூர்வமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த விசாரணையின் மூலம் சம்பவத்தின் முழுமையான உண்மை நிலை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More