Home இலங்கைசெம்மணி புதைகுழியில் என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது – மண்ணை அரித்தெடுக்கும் பணிகளும் ஆரம்பம்

செம்மணி புதைகுழியில் என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது – மண்ணை அரித்தெடுக்கும் பணிகளும் ஆரம்பம்

by admin

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் , அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி ஞா. ரனீத்தா தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் நாள் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் . மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய அகழ்வு பணிகளின் போது ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட இரு என்பு கூட்டு தொகுதிகளின் பகுதியளவான என்பு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.  அதேவேளை அகழ்வு பணிகளின் போது சில என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றினை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவற்றை சுத்தம் செய்த பின்னரே எத்தனை என்பு கூடு என்பதனை உறுதியாக கூற முடியும்.
அகழ்வு பணிகள் 1.5 அடி தொடக்கம் 2 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த ஆழத்தில் அகழ்வு பணிகள் மேற்கொண்ட என்பு கூடுகள் மீட்கப்பட்டன.  இன்றைய அகழ்வு பணிகளின் போது ஓர் இடத்தில் சந்தேகத்திற்கு உரிய முறையில் கரியநிற மண் காணப்பட்டது. அதனால் , அதனை அரித்தட்டு மூலம் அரித்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.  அத்துடன் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறிய வலை போன்ற பொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

#ChemmaniMassGrave  #ExcavationDay3 #HumanRemainsFound #JaffnaLegal

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More