Home இலங்கையாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:  

யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:  

by admin

ஈழத்தமிழர் வரலாற்றின் மிகத்துயரமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாண மாநகர சபையின் இன்றைய அமர்வின் போது உயிரிழந்த உறவுகளுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மே மாதத்திற்கான மாதாந்த சபை அமர்வு இன்று (2026 மே 14, வியாழக்கிழமை) காலை மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

சபை அமர்வின் தொடக்கத்தில், முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் கொடூரத்தைச் சித்தரிக்கும் ஒளிப்படம் ஒன்று சபையின் நடுவே வைக்கப்பட்டது. அந்த ஒளிப்படத்தின் முன்பாகப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் மலர் தூவித் தமது அஞ்சலியைச் செலுத்தினர்.  அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, போரில் மடிந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் ஆத்மா சாந்திக்காக ஒரு நிமிட அக வணக்கம் (Silent Prayer) செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னரே, மாநகர சபையின் ஏனைய வழமையான நிர்வாகப் பணிகள் மற்றும் விவாதங்கள் அடங்கிய சபை அமர்வு உத்தியோகபூர்வமாகத் தொடங்கியது.

 

#JaffnaMC #Mullivaikkal2026 #RemembranceDay  #JaffnaEvents  #TamilGenocideMemorial

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More