Home இலங்கை“ஆமாம், சஹ்ரான் ஹாஷிமுடன் இணைந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த நான் சத்தியப்பிரமாணம் செய்திருந்தேன்!”

“ஆமாம், சஹ்ரான் ஹாஷிமுடன் இணைந்து தற்கொலைத் தாக்குதல் நடத்த நான் சத்தியப்பிரமாணம் செய்திருந்தேன்!”

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சியின் அதிரடி வாக்குமூலம்!

by admin
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில், மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் தீர்க்கமான சாட்சியப் பதிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் இணைந்து, தானும் ஒரு தற்கொலைத் குண்டுதாரியாக மாறி தாக்குதல் நடத்துவதற்குச் சத்தியப்பிரமாணம் எடுத்திருந்ததாக அரசுத் தரப்புச் சாட்சியாக மாறியுள்ள நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொழும்பு சிறப்பு நீதியரசர்கள் ஆயத்தின் (Trial-at-Bar) முன்னிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த சாட்சியப் பதிவின் போது, தாக்குதல் திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல முக்கிய இரகசியங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். சுமார் 200 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த வழக்கின் மிக முக்கியத் திருப்பமாக இந்தச் சாட்சியம் பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகள் நீடித்ததுடன், சாட்சியின் உயிருக்கு இருக்கும் பலத்த அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, காவற்துறையினரின் மிக உயரிய பாதுகாப்பு உத்திகள் மற்றும் கடுமையான பாதுகாப்புப் வழிமுறைகளைப் பயன்படுத்தி அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். மேலும், வழக்கு விசாரணையின் இடைவேளைகளின் போதும் அவர் அத்தீவிரப் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More