71
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகளின் தீவிர மத்திஸ்தத்துவத்தின் மூலம் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, லெபனான் உள்ளிட்ட அனைத்து முன்னணிகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க கடற்படையின் முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கும், சர்வதேச எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) எவ்வித கட்டணமுமின்றி கப்பல் போக்குவரத்திற்காக திறப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) முழுமையான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வாக அமையவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், வரும் பெப்ரவரி அல்லாமல், ஜூன் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

