Home இலங்கைசெம்மணியில் மீட்கப்படும் என்புகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் முடக்கம் – சுமந்திரன் காட்டம்

செம்மணியில் மீட்கப்படும் என்புகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் முடக்கம் – சுமந்திரன் காட்டம்

by admin

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் இருந்து தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் சூழலில், அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் மரபணு சோதனைப் பணிகள் ஓராண்டாக முடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கவலை வெளியிட்டுள்ளார். நாளை வெள்ளிக்கிழமை (2026 ஜூன் 19) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சரிடம், இந்த ஆவணங்களைச் சர்வதேச ஆய்வகங்களுக்கு அனுப்பிச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய புதைகுழி: செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை (ஜூன் 17) வரையில் 380-ஆவது எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் மன்னார் ‘சதொச’ புதைகுழியில் 376 எலும்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டதே அதிகப்படியாக இருந்தது.   இங்கு வெறுமனே ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிசுக்கள் (குழந்தைகள்) எனப் பலரது எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டு, திட்டமிட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.

கடந்த 1998-ஆம் ஆண்டு இராணுவ வீரர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அப்போது முதற்கட்ட அகழ்வுகள் இடம்பெற்று 15 எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்டன. அவற்றில் இரண்டு உடல்கள் வெளிநாட்டு ஆய்வு மூலம் அடையாளம் காணப்பட்டன. தற்போது அகழ்வுப் பணிகள் ஓராண்டாகியும் அடுத்தகட்ட நகர்வின்றி முடக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், நீதி அமைச்சரிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:

இலங்கையில் மரபணு (DNA) சோதனைக்கான போதிய நிபுணத்துவம் இல்லையெனில், நீதிமன்ற உத்தரவின்படி இந்த எலும்புத் தொகுதிகளைச் சர்வதேசத் தரம் வாய்ந்த ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும்.  எலும்புகளைத் தோண்டி எடுப்பதுடன் நிறுத்தாமல், அவை யாருடையவை என்பதைத் துரிதமாக அடையாளம் காணும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.   இந்த கொடூரமான மனிதப் படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு எதிராகத் தாமதமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தொிவித்தாா்.

#ChemaniMassGrave  #MA_Sumanthiran #MassGraveSriLanka  #JusticeForTamil  #JusticeMinisterVisit

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More