வலிகாமம் வடக்கு (Valikamam North) பிராந்தியத்தில் இலங்கை ராணுவத்தினரின் (Military) கட்டுப்பாட்டிலுள்ள தங்களது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, வலி. வடக்கு நிலமிழந்த சிவில் பொதுமக்கள் பலாலி சந்தியில் (Palaly Junction) இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (2026 ஜூலை 26) 6-ஆவது வாரமாகவும் தங்களது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 36 வருடங்களாகத் தங்களது பரம்பரை நிலங்களை இழந்து, சொந்த வீடுகளின்றி நலன்புரி முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் இப் பொதுமக்கள், ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீக நிலங்களை மீட்டெடுக்கும் ஒரே நோக்கில் இத் தொடர் போராட்டத்தைச் முன்னெடுத்து வருகின்றனர்.
“எங்களது சொந்த நிலங்களில் ராணுவத்தினர் சட்டவிரோதமாகப் பாரிய விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், வர்த்தக நிலையங்களை அமைத்துத் தங்களது சொந்தப் பொருளாதாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நில உரிமையாளர்களான நாங்கள் கடந்த 36 ஆண்டுகளாக நிலமும் வீடும் இன்றித் தெருவில் நிற்கிறோம்.” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனா்.
கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்தினர் என்ற போர்வையில், பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வலி. வடக்கு பிரதேச சபைக்குச் (Pradeshiya Sabha) சொந்தமான குடிநீர் தாங்கி (Water Tank) மற்றும் தற்காலிக மலசலகூடம் என்பவற்றைப் பலாலி காவற்துறையினர் உத்தியோகபூர்வமாகப் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். இதனால் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகளின்றிப் பாரிய சிவில் இன்னல்களை எதிர்கொண்டனர்.
சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தற்காலிகக் கொட்டகை அமைக்கவோ அல்லது தரப்பாள் சீட்டை (Tarpaulin) கட்ட இரண்டு மரத்தடிகளை வீதியோரத்தில் நாட்டவோ காவற்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்கள் மற்றும் தாய்மார்கள் தங்களது கைகளினாலேயே தரப்பாள் சீட்டைப் பிடித்துத் தலையின் மேல் தாங்கியவாறு வெயிலில் நின்றபடி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
#ValikamamNorthLandProtest2026 #PalalyJunction6thWeekProtest #JaffnaCiviliansLandRights #PalalyPoliceWaterTankSeizure #NorthernProvinceHumanRightsNews


