Home இலங்கை யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ், கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இப்பெற்றோல் குண்டுத் தாக்குதலில் வீட்டின் ஒருபகுதி சிறியளவில் தீக்கிரையாகியுள்ளதாகவும், பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இரவு 9 மணியளவில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் கதவினையும் அடித்து உடைத்துள்ளனர்.

இவர்களின் அட்டகாசத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்த அயல் வீட்டாரின் மீதும் அவர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.இருப்பினும் அவர் சுதாகரித்து கொண்டு திரும்பி வீட்டுக்குள் ஓடியதனால் அவரின் வீட்டு கதவின் மீதி வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More