சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து தொடா்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய அவர் இவ்வாறு கைது செய்யப்படடுள்ளார்.
அதன்படி, செஹான் மாலக கமகே பாணந்துறை பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது