Home இலங்கை பல அரச நிறுவனங்களை கலைக்கப்படவுள்ளன

பல அரச நிறுவனங்களை கலைக்கப்படவுள்ளன

by admin

 

இலங்கை திரிபோச நிறுவனம் உட்பட பல அரச நிறுவனங்களை கலைப்பது தொடர்பில் அரசாங்கம்  கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கீழ் நிர்வகிக்கப்படும் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு தொடர்பான நோக்கங்களுக்கு அமைய, விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வகையில் இலங்கை திரிபோச நிறுவனம், இலங்கை பத்திரிகை பயிற்சி நிறுவனம், சிறுவர் பாதுகாப்பு தேசிய அறக்கட்டளை நிதியம் மற்றும் திறைசேரி செயலாளருக்கு சொந்தமான நிறுவனங்கள், குறைவான செயல்திறன் கொண்ட நிறுவனங்கள் அல்லது பயன்படுத்தப்படாத சொத்துகள்    மறுமலர்ச்சி சட்டத்தின் கீழ் கலைக்கப்பட உள்ளன.

மேலும் கலைக்கப்படவுள்ள அல்லது ஏனைய நிறுவனங்களுடன் இணைக்கப்படவுள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More