Home இலங்கை தாக்குதல் அச்சத்தால், கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது…

தாக்குதல் அச்சத்தால், கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது…

by admin


கொழும்பின் பல பகுதிகளில் இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவும் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், காவற்துறையினர், விசேட அதிரடிப்படை, இராணுவம், கடற்படை, விமானப்படை என சகல பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்களில் அதிகூடிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்குதல் தொடர்பான செய்தி வதந்தியென காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளதோடு, மக்களை தமது அன்றாட செயற்பாடுகளை வழமைபோன்று முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #safety #colombosecuritysituation #srilanka #eastersundayattacklk

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More