Home இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கவும், சமத்துவம் ஒற்றுமையை பேணவும் பயங்கரவாத தடைச் சட்டம் அவசியம்…

மனித உரிமைகளை பாதுகாக்கவும், சமத்துவம் ஒற்றுமையை பேணவும் பயங்கரவாத தடைச் சட்டம் அவசியம்…

by admin

 
பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமே நாட்டின் சமத்துவம் ஒற்றுமை போன்றவற்றை நிலையாக பேண முடியும். பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்பட்டால் நாட்டின் சமத்துவம் சீர்குலையும் என அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,  இலங்கையில் 30 வருடகாலமாக நிலவிய போர்நிலைமைகளின் போது மக்களின் உயிர் காவூகொள்ளப்பட்டன. மக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. இருப்பினும் அந்த நிலைமைகளிலிருந்து மக்கள் மீண்டுவருவதற்கு பயங்கரவாத தடைசட்டம ஆறுதலாக அமைந்தது. ஆகவே பயங்கரவாத தடைச் சட்டம் ஒழிக்கபடவேண்டுமென்ற விடயத்தினை ஏற்றுகொள்ள முடியாது.

தமிழிழ விடுதலைபுலிகள் நாட்டை ஆக்கிரமிக்கும் நோக்கிலே போரிட்டனர். போர் முடிவடைந்த பின்னரும் அவர்களது நோக்கங்கள் முடிவுறவில்லை. நாட்டை இரண்டாக பிரித்து தனி ஈழத்தினை உருவாக்குவது விடுதலை புலி இயக்கத்தின் ஆதரவாளர்களின் தற்போதைய அரசியல் நோக்கமாக காணப்படுகின்றது.

அதேபோன்று தற்போது அரசியலில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஈழத்தினை பிரித்து தனியாட்சியினையே கோருகின்றனர். தனியாட்சி பெற்றுகொள்ள அரசியல்வாதிகள் முயற்சிக்கும்போது நாட்டில் தற்போது காணப்படும் அமைதி சீர்குலைவதற்கு இது முழு காரணமாக அமைந்துவிடும். அரசியல்வாதிகளின் நாட்டைபிரிக்கும் எண்ணங்களுக்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும்.

இந்த தடைசட்டமானது இலங்கையின் மனித உரிமைகளை பாதுகாத்து வருகின்றது. போர் காலத்தில் மக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். அதுபோன்ற மனித உரிமைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தவிர்த்து கொள்வதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் பலமாக அமைந்தது. அந்நிய அமைப்புக்களின் சதிகளிலிருந்து மக்களின் உரிமைகளை பேண வேண்டுமானால் பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கபடகூடாது என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More