Home இலங்கை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 1000 சீசீ மோட்டார் சைக்கிளில் சென்றார்கள் – சிங்கள ஊடகம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 1000 சீசீ மோட்டார் சைக்கிளில் சென்றார்கள் – சிங்கள ஊடகம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 1000 சீசீ என்ஜின் வலுவுடைய அதிவேக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர் என சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள 1000 சீ.சீ. ரக அதிவேக மோட்டார் சைக்கிளில் இவர்கள் பயணித்துள்ளனர் எனவும் இந்த அதிவேக மோட்டார் சைக்கிளிற்கு யாழ்ப்பாண மோட்டார் போக்குவரத்துப் பிரிவு எவ்வாறு அனுமதி வழங்கியது என்பது குறித்து சந்தேகம் எழுவதாகவும் குறித்த  ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலங்களில் பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழர்களினால் இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர் இரண்டு காவல்துறை புலனாய்வாளர்கள் மீது வாள்வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட போதும் இந்த ரக 1000 சீ.சீ மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் இந்த சைக்கிளில் பயணித்துள்ளதாகவும் குறித்த ஊடகத்தில்  தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதுடன் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் 100 cc என்பது உலகறிந்த விடயம்…  இதுவே மாணவர்கள் ஓட்டிச் சென்ன வாகம்..

 100cc

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More