Home உலகம் ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக 27 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக 27 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவினால் ஏற்பட்டுள்ள குளிரை தாங்க முடியாமல் 27 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு   ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் வீதிகளில் பனி 50 சென்டிமீட்டர் அளவு உயரத்துக்கு காணப்படுவதால் நாட்டின் பிற பகுதிகளுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸிலும் குறைந்து காணப்படுவதால்   மக்கள்  குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும்  இதனால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஒவ்வொரு ஆண்டும் ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு  நிலவுவதனால்   அதிகளவான  மக்கள் உயிரிழக்கின்றனர்.  2015 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான்  முழுவதிலும் இடம்பெற்ற பனிப்பாறை சரிவுகள் காரணமாக    300 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More