இலங்கையில் அடுத்த வருடம் இந்தியா, இலங்கை, பங்களாதேஸ் அணிகள் அணிகள் மோதும்; முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஒன்று நடைபெற உள்ளது. இலங்கையின் 70ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
அடுத்தவருடம் மார்ச் மாதம் 15ம் திகதி முதல் 30ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடருக்கு நிதாஹஸ் டிரபி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு போட்டிகள் விளையாட உள்ளன. குறித்த முத்தரப்பு தொடர் ஒருநாள் கிரிக்கெட் தொடரா? அல்லது இருபதுக்கு20 தொடரா என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment